இளைஞர் கொலை: அண்ணன் கைது :

கோவில்பட்டி: பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி. இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் முனியசாமி (51) என்பவருக்கு மட்டும் திருமணமாகவில்லை. இவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். ஆறுமுகம் தனது சொத்துக்களை மற்ற இரு மகன்களுக்கு எழுதி வைத்துள்ளார். இதனால் முனியசாமிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இவரது 2-வது தம்பி முருகன்(45) ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். இதனை தனது தந்தையிடம் காண்பிப்பதற்காக தெற்கு பொம்மையாபுரத்துக்கு சென்றுள்ளார். இரவு நேரம் ஆகி விட்டதாலும், பலத்த மழை தொடர்ந்து பெய்ததாலும் தந்தை வீட்டிலேயே இரவு தங்கினார். சொத்து பிரச்சினையில் ஆத்திரத்தில் இருந்த முனியசாமி, தூங்கிக் கொண்டிருந்த தனது தம்பி முருகனை நள்ளிரவில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

எஸ்.பி. ஜெயக்குமார், டி.எஸ்.பி. சங்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். முனியசாமி கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE