சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : நீதிபதிகள் தொடங்கி வைத்தனர் :

தூத்துக்குடி: நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அனைத்து கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களிலும் இலவச சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) ஹேமா, குடும்பநல நீதிபதி சுவாமிநாதன் தலைமை வகித்து பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தனர்.

தலைமை குற்றவியல் நீதிபதி செல்வக்குமார், சார்பு நீதிபதி மாரீசுவரி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாஸ்கர், 4-வது நீதித்துறை நடுவர் ராஜகுமரேசன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீஸார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பீரித்தா செய்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE