இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பீ.மீராசா மரைக்காயர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

கட்சியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹீம் மக்கீ, மாநில துணைத் தலைவர்எஸ்.எம்.கோதர் மொகிதீன், மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு மாநிலபொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட வேண்டும். காயல் பட்டினம் நகராட்சி தலைவர் பதவிக்கான இடத்தை கூட்டணி தலைமையிடம் கேட்டு பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE