வாக்காளர் : பெயர் சேர்க்க : சிறப்பு முகாம் :

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தப் பணிகளுக்காக நவம்பர் மாதத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2022 பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளன. இதை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, 1-1-2022 நாளை தகுதியாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கும் பணி தொடங்க உள்ளது. வரும் நவம்பர் 13 மற்றும் 14-ம் தேதி களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இதில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்’’ என தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE