பர்கூரில் பேராசிரியையிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு :

பர்கூரில் கல்லூரி பேராசிரியை அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பி.ஆர்.ஜி.,மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுஜிதா (34). இவர் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 30-ம் தேதி இரவு, தன் இருசக்கர வாகனத்தில் பர்கூர் நகரில் உள்ள ஒரு வங்கியின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சுஜிதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கநகைளை பறித்துக் கொண்டு தப்பி யோடினார்.

இதுதொடர்பாக சுஜிதா பர்கூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE