பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஈரோட்டில் 12-ம் தேதி பேச்சுப்போட்டி :

ஈரோடு: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஈரோடு மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரும் 12-ம் தேதி பேச்சுப் போட்டி நடக்கிறது.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால்நேருவின் பிறந்ததினத்தையொட்டி, ஈரோடு ஆட்சியரக கூட்ட அரங்கில், வரும் 12-ம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும், மாலை 3 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும் நடக்கவுள்ளது.

மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி, கல்லூரி முதல்வர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, போட்டி நாளன்று காலை தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநரிடம் அளிக்க வேண்டும். ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து 2 மாணவர்கள் வீதம் பங்கேற்கலாம்.

பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் நடுவர்கள் முன்னிலையில் மாணவர்களிடம் அறிவிக்கப்படும். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்கள் மற்றும் சிறப்பிடம் பெறும் இரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE