நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம் :

தி.மலை மாவட்டம் ஜமுனா மரத்தூர் அடுத்த மோட்டூர் கிராமத்தில் வசிப்பவர் காந்தி(20). இவரது மனைவி சினேகா. இவர்கள் இருவரும் மோட்டூர் காப்புக் காட்டில் ஆடுகளை கடந்த 31-ம் தேதி மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், காந்தி மீது துப்பாக்கி குண்டு சிதறல்கள் பாய்ந்து படுகாயமடைந்தார்.

அவரது உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளி யேறியது. உயிருக்கு ஆபத் தான நிலையில், வேலூர் அடுக் கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஜமுனாமரத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டவர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE