நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும் : தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித் துள்ளார்.

வில்லிபுத்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்துக்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும். நவம்பர் முதல் நாளை தமிழர் இறையாண்மை நாள் என அறிவிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்