ராஜபாளையம் அருகே - 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான அரிசி அரவை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல்லை அரிசியாக மாற்றி நியாய விலை கடைகளுக்கு விநியோகம் செய்யும் பணி நடந்தது.

தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லை மற்ற இடங் களுக்கு விற்பனை செய்ததாக வந்த புகார் காரணமாக கடந்த மாதம் 7-ம் தேதி அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் மூடப்பட்டி ருந்த அரிசி ஆலைக்கு சில தினங்களாக வாகனங்கள் வந்து செல்வதாக குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் சங்கரபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அதை யடுத்து, தனி வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் அரிசி ஆலையில் நேற்று சோதனை நடத்தினர். மூடப்பட்ட அரிசி ஆலையில் சட்டவிரோதமாக 5.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர். தளவாய்புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்