அகாடமி கிரிக்கெட்: மேஜர் சரவணன் கோப்பையை வென்றது சென்னை அணி :

திருச்சி: திருச்சியில் மாநில அளவில் நடைபெற்ற அகாடமிகளுக்கு இடையேயான மேஜர் சரவணன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வென்றது.

தமிழக அளவில் அகாடமிகளுக்கு இடையே மேஜர் சரவணன் நினைவு கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் திருச்சி ஆர்.கே.வி கிரிக்கெட் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இதில் உடுமலைபேட்டை கிரிக்கெட் அகாடமி, சென்னை இந்தியன் எபிலிட்டி அகாடமி, திருச்சி ஆர்கேவி அகாடமி, கடலூர் இன்பினிடி அகாடமி உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த உடுமலைபேட்டை அகாடமி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்தது. அந்த அணியின் வீரர் ராம் 26 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய இந்தியன் எபிலிட்டி அகாடமி அணி 11.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் அக்சய்குமார் ஆட்டமிழக்காமல் 51 ரன், டன்ஸ்மினியன் 44 ரன்கள் எடுத்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை நிர்வாகி செந்தில்குமார், டாக்டர் சித்ரா ஆகியோர் கோப்பையை வழங்கினர். பரிசளிப்பு விழாவில் ஆர்கேவி அகாடமி நிறுவனர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்