அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் ஜவுளிக்கடையில் திருடிய 5 பேர் கைது :

அரியலூர்: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு நேற்று மாலை வந்த 5 பேர், ஜவுளி எடுப்பது போல நடித்து, 8 புடவைகள், லுங்கிகளை எடுத்து தங்கள் உடைகளுக்குள் மறைத்துள்ளனர்.

இதைப் பார்த்த ஊழியர்கள், 5 பேரையும் பிடித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் ஜெயங்கொண்டத்தை அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்த அருமைராஜ் மனைவி கற்பகம்(40),ரமேஷ் மனைவி கல்பனா(35),செல்வம் மனைவி லலிதா(50),ராமசாமி மனைவி அலமேலு(70),சிதம்பரம் மகன் சங்கர்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்