பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆக்டா வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருச்சி: தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கம்(ஆக்டா) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சகாய சதீஸ் நேற்று அனுப்பிய மனு:

கடந்த ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைக் கைவிட்டும், வேலைநிறுத்த போராட்ட காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்தியும் அரசாணை பிறப்பித்தமைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் பல ஆண்டு கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்