தென்காசி: தென்காசி ஈஸ்வரன்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை எஸ்பி கிருஷ்ணராஜ் பார்வையிட்டார். மோட்டார் வாகனங்களை உரிய முறையில் பராமரித்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், வாகனங்களில் எப்போதும் முதலுதவிப் பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
மேலும் ஒவ்வொரு காவலர்களிடமும் அவர்களின் குறைகளை நேரடி யாக கேட்டறிந்து அதனை விரைவில் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுசில், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மார்டின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago