கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த பெண்ணுக்கு வெட்டு :

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி சுமித்ரா (32), அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (35) ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வெளியூரில் தங்கியிருந்த சுமித்ரா தனது தாயுடன் வசித்துவரும் குழந்தைகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் நாங்குநேரிக்கு வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கும், சகோதரர் செல்வராஜ் (25) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சுமித்ரா அரிவாளால் வெட்டப்பட்டார். பலத்த காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நாங்குநேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்