மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திறப்பு :

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படும் விவரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற ஏதுவாக மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தென்காசி ரயில் நிலைய சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 5-ல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நேரில் வர இயலாத மாற்றுத் திறனாளிகள் 04633 212915 என்றஅலுவலக தொலைபேசி எண்ணில்தொடர்புகொண்டு, விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனதென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE