சின்னாளபட்டியில் சமுதாய வளைகாப்பு சீர்வரிசைப் பொருட்களை வழங்கிய அமைச்சர் :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, சின்னாளபட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நடந்தது.

ப.வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் பூங்கொடி வரவேற்றார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

அவர் பேசுகையில், குழந்தைகளை சிறந்த முறையில் கல்வி பயில வைக்க வேண்டும். கல்வியின் மூலமே பல்வேறு வளர்ச்சியை அடைய முடியும். அரசின் நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கன்னிவாடியில் 200 பேர், சின்னாளபட்டியில் 200 பேர் என மொத்தம் 400 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்