சத்துணவுத் திட்டத்தை பிளஸ் 2 வரை நீட்டிக்க வேண்டும் : ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ராஜாங்கம் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், மாவட்ட அமைப்பு செயலாளர் மு.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை பிளஸ் 2 வரை நீட்டிக்க வேண்டும். கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்களை அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்டு தகுதியின் அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும். பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணங்கள், புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் வாங்கியது தொடர்பான முறைகேடுகளை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 20 மாணவர்களுக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE