திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு - புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பெயர் எழுதி வைக்க அறிவுறுத்தல் :

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பெயரை அறிவிப்புப் பலகையில் எழுதும்படி அறிவுறுத்தினார்.

திருச்செங்கோடு கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனையில் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை நோயாளிகளிடம் மருத்துவர்கள், செவிலியர்கள் எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள், முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். கழிவறைகள், பார்வையாளர் மாடம் ஆகியவை முன்பைவிட தற்போது நல்ல முறையில் பராமரிப்பு செய்யப்படுவதாக எம்எல்ஏ பாராட்டினார்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிறுசிறு குப்பைகளை அகற்ற வேண்டும், புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பெயரை அறிவிப்புப் பலகையில் எழுத வேண்டும், என அறிவுரை வழங்கினார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE