கொக்கிரகுளம் துணைமின் நிலைய பழுது நீக்கம் :

திருநெல்வேலி கொக்கிரகுளம் துணைமின் நிலைய பழுதுசரிசெய்யப்பட்டு மின்விநியோகம் சீராகியுள்ளது.

இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்களின் புகாரின் பேரில் மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். துணைமின் நிலையத்தில் பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது. அதை சரிசெய்யும் பணிகள் அதிகாரிகள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் பலமணி நேரத்துக்குநீடித்ததை அடுத்து, மின்தடை ஏற்பட்ட பகுதிகளுக்கு மாற்றுஏற்பாடுகள் மூலம் மின்விநியோகம் செய்யப்பட்டது. துணைமின் நிலைய பழுது நீக்கும் பணிகள் நேற்றுமுன்தினம் இரவு முழுக்க நீடித்தது. காலை 6.40 மணிக்கு பின் பணிகள் முடிவுற்று மின்விநியோகம் சீராக்கப்பட்டது. இப்பணியை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நகர்ப்புறசெயற்பொறியாளர் முத்துக்குட்டி மற்றும் உதவி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்