பிருதூர் கிராம சபையில் மாணவி கவுரவிப்பு :

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே பிருதூர் கிராமத்தில் சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரத்தை நேர்மையுடன் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு கிராம சபை கூட்டத்தில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தில் வசிப்பவர் கோதைநாயகி (8). பள்ளி மாணவியான இவர், தனது வீட்டின் அருகே உள்ள குளக்கரை பகுதியில் தோழிகளுடன் கடந்த மாதம் 22-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் கிடந்த ரூ.40 ஆயிரத்தை கண்டெடுத்துள்ளார். பின்னர், அந்த பணத்தை கிராம முக்கிய பிரமுகர்கள் மூலமாக வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் தந்தையுடன் சென்று மாணவி கோதைநாயகி ஒப்படைத்தார். அவரது செயலை ஊராட்சி மன்றம் மற்றும் காவல்துறையினர் பாராட்டினர்.

இந்நிலையில் பிருதூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சாலையில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த பள்ளி மாணவி கோதைநாயகிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்