சேலம் மாநகரில் 14 காவல் நிலையங்கள், போக்குவரத்துக் காவல் பிரிவு, கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றில் ஒரேஇடத்தில் கடந்த 3 ஆண்டுகள் பணிபுரிந்த 303 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, எஸ்எஸ்ஐ 81 பேர், ஏட்டுக்கள் 126 பேர், இரண்டாம் நிலை காவலர்கள், முதல் நிலை காவலர்கள் உள்ளிட்ட 303 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை தொடர்புடைய இன்ஸ்பெக்டர்கள் உடனடி யாக பணியில் இருந்து விடுவிக்கவும், அவர்களை புதிய பணியிடத்தில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago