சிதம்பரத்தில் - அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் :

சிதம்பரத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி இடைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் 19-வது வார்டு உறுப்பினராக இருந்த ஜெகன்பன்னீர்செல்வம் உயிரிழந்ததால் வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் 19-ம் வார்டுக்கான இடைத் தேர்தல் வரும் 9-ம் தேதி நடக்கிறது. 19-வது வார்டு குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெயங்கொண்டபட்டினம், பெராம்பட்டு மற்றும் கீழகுண்டலபாடி ஊராட்சிகளை உள்ளடக்கியதா கும். சிதம்பரத்தில் இதற்கான அதிமுக அலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேட்பாளர் தேர்வு, வேட்பாளரை வெற்றிபெற வைக்க அனைவரும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE