பாம்புக் கடியிலிருந்து பாதுகாக்க ஆளுநர் தமிழிசை அறிவுரை :

பாம்புக் கடி குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு இணையவழி கருத்தரங்கை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் அவர் பேசியதாவது:

பாம்புக் கடி மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, பாம்பு கடித்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது விஷம் தலைக்கு ஏறாமல் இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கிராமப் புறங்களில் உள்ளவர்களை பாம்புக் கடிகளி லிருந்து காப்பாற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அவர்களது வாழ்வியல் நிலைமை மற்றும் வாழ்வியல் முறைகளை மேம்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு, விழிப்புணர்வு, மருத்துவம் ஆகியவை இணைந்து செயல்படும்போது பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை நாம் பெரிதும் தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE