அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் இன்று திறப்பு :

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரா கோட்ஸ், ஜேகே பென்னர் உள்ளிட்டவை இணைந்து ரூ.90 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைத்துள்ளன.

இந்த மையத்தை அமைச் சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் இன்று திறந்து வைக்கின்றனர்.

ஆட் சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன், டீன் ரத்தினவேலு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறக்கப்பட உள்ளதை யடுத்து, மருத்துவமனையில் கூடுதலாக 250 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE