இரவு நேரங்களில் - பெண்களின் பாதுகாப்புக்கு புதுச்சேரியில் புதிய திட்டம் :

புதுச்சேரியில் இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க, அம்மாநில அரசு புதிய திட்டத்தைக் கொண்டுவர உள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான இறுதி விவாதத்தில் பதிலளித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:

புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் அறிமுகமாகிறது.

இரவு 10 மணி முதல் காலை 6 வரை தனியாக இருக்கும் பெண்களோ, பணிமுடிந்து வீட்டுக்குச் செல்லும் பெண்களோ, வெளியூரில் இருந்து வந்துள்ள பெண்களோ, தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதினால் காவல் துறை கட்டுப்பாட்டு எண் 112-க்கு தொடர்பு கொள்ளலாம்.

காலதாமதமின்றி ஒரு பெண் காவலருடன், நான்குசக்கர வாகனத்துடன் சென்று, அந்தப் பெண்ணை, அவர் அளித்த முகவரியில் பாதுகாப்புடன் சேர்ப்பார்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE