புதிய எஸ்.ஐ.களுக்கு எஸ்பி அறிவுரை :

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 968 நேரடி உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பெண்கள் உட்பட 49 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வருகிற 31-ம் தேதி பயிற்சி தொடங்குகிறது.

இலத்தூர் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக தேர்வான உதவி ஆய்வாளர்களுக்கு எஸ்பி கிருஷ்ணராஜ் வாழ்த்து தெரிவித்து அறிவுரை வழங்கினார். காவல்துறை பணியில் நேர்மையுடன் திறம்பட செயல்பட வேண்டும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக பணியாற்ற வேண்டும். குற்றம் புரிந்தவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்