புதிதாக 73 பேருக்கு கரோனா தொற்று :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 48,111- ஆக அதிகரித்தது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு தொற்று பாதிப்பால் மொத்த எண்ணிக்கை 41,988-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 251 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE