ரூ.9.50 லட்சம் முறைகேடு: கூட்டுறவு சங்க செயலாளர் கைது :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே உள்ள மாதவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கவிநாதன் (53). இவர் 2.4.2014 முதல் 20.9.2017 வரை பொய் செலவு கணக்குகள் எழுதி ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்து 887 முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கூட் டுறவு துணைப் பதிவாளர் கோவிந்தராஜன், ராமநாதபுரம் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து கவிநாதனை கைது செய்து போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE