வங்கியில் கணக்கு தொடங்கக் கோரி : தாயாருடன் தர்ணாவில் ஈடுபட்ட மாணவி

காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தைச் சேர்ந்த போதுராஜா, கீதா தம்பதியின் மகள் சந்தானலட்சுமி. இவர் சிலுக்கப்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மிகவும் பிற்பட்டோருக்கான உதவித்தொகை பெற வங்கிக்கணக்கு தொடங்கி ஜூலை 29-க்குள் விண்ணப்பிக்க பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து வங்கி கணக்கு தொடங்க, ஒரு வாரமாக தனது தாயார் கணக்கு வைத்துள்ள காளையார்கோவில் இந்தியன் வங்கிக்கு சந்தானலட்சுமி அலை ந்தார். ஆனால் அதிகாரிகள் அலைக்கழித்தனர்.

இந்நிலையில் நேற்று தனது தாயாருடன் வந்த மாணவி, வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். அதற்கு வங்கி அதிகாரிகள், விண்ணப்பத்தைத் தந்துவிட்டுப் போங்கள். ஒரு வாரம் கழித்து வங்கி புத்தகம் தருகிறோம் என்றனர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவியும், அவரது தாயாரும் வங்கி முன் பாக தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அங்கி ருந்தோர் வங்கி அதிகாரி களிடம் வாக்குவாதம் செய்தனர். இதை யடுத்து அதிகாரிகள் வங்கி கணக்கு தொடங்கி கொடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE