பெருமாநல்லூர் அரசு பள்ளியில் நாளை கரோனா தடுப்பூசி முகாம் :

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் பெருமா நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஜூன் 28) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்த வாய்ப்பை முன்கள பணியாளர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE