திண்டுக்கல்லில் - வாக்கு எண்ணும் மையத்தை டி.ஐ.ஜி. ஆய்வு :

திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் பதிவான வாக்குகளின் மின்னணு இயந்திரங்கள் திண்டுக்கல் முத்தனம்பட்டி அருகே அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி வளாகத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என போலீஸ் டிஜிபி கே.திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து திண்டுக்கல் டிஐஜி முத்துச்சாமி திண்டுக்கல் மாவட்ட தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்று ஆய்வு செய்தார்.

சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை அதன் கண்காணிப்பு அறைக்குச் சென்று பார்த்தார்.

தொகுதி வாரியாக சீல் வைக்கப்பட்டுள்ள அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு அடிக்கடி சென்று ஆய்வு செய்யவும் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்