தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 பேர் வேட்புமனு தாக்கல் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 40 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம், அமமுக வேட்பாளர் ம.சேகர், தஞ்சாவூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் ராமநாதன், பாபநாசம் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

கும்பகோணம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பாலமுருகன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், பகுஜன் சமாஜ் கட்சி நதியா, திருவிடைமருதூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி புரட்சிமணி, பட்டுக்கோட்டை தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர் சதாசிவம், திருவையாறு தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் திருமாறன், பேராவூரணி தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் பச்சமுத்து உட்பட 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நேற்று ஒரே நாளில் 40 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE