ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது.

ராமநாதபுரம் அரண்மனை முன் அவரது உருவப்படத்துக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவர் செ.முருகேசன், நகர் செயலாளர் அங்குச்சாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

ராமநாதபுரம் போக்குவரத்து அலுவலகப் பகுதியில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்தனர். பட்டணம்காத்தான் பகுதியில் மண் டபம் ஒன்றியக் குழு உறுப்பினர் மருதுபாண்டியன் தலைமையில் விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் நகரில் கேணி க்கரை சாலை சந்திப்பு, பாரதி நகர், திருப்புல்லாணி, தேவிபட்டினம், கீழக்கரை உள்ளிட்ட இடங்களிலும் ஜெயலலிதா பிறந்த நாள் கொண் டாடப்பட்டது.

முதுகுளத்தூரில் அதிமுக ஒன்றியச் செயலாளரும், தலை வருமான ஆர்.தர்மர் தலைமையில் கட்சியினர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவினர்.

நல்லூர் ஊராட்சித் தலைவர் என். தங்கப்பாண்டி, ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவர் கதிரேசன், ஒன்றியக் கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் உள்ளி ட்டோர் கலந்துகொண்டனர்.

கடலாடி பஸ் நிலையத்தில் ஒன்றியச் செயலாளரும், ஆப்பனூர் கூட்டுறவு சங்கத் தலைவருமான என்.கே.முனியசாமி பாண்டியன் தலைமையில் ஜெயலலிதா படத் துக்கு மாலை அணிவித்தனர்.

இதில் பொதுக்குழு உறுப் பினர் முனியசாமி, ஊராட்சித் தலை வர்கள் கடலாடி ராஜமாணிக்கம் லிங்கம், கண்டிலான் மணிமேகலை முத்துராமலிங்கம், கடுகுசந்தை ஆ.காளிமுத்து, கரிசல்குளம் எம்.வில்வத்துரை, கீழச்சிறுபோது ஜெ.முத்துலெட்சுமி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE