அங்கன்வாடி ஊழியர் போராட்டம் நியாயமானது: பாரிவேந்தர்

பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பெரம்பலூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்களை நேற்று சந்தித்த பெரம்பலூர் தொகுதி மக்க ளவை உறுப்பினரும், இந்திய ஜன நாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் போராட்டம் நியாயமானது. அவர்களது கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன் என்றார்.

பின்னர், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினரின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  வெங்கட பிரி யாவிடம் பாரிவேந்தர் அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE