புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் திமலை மாவட் டத்தில் நேற்று 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,807 ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,639 ஆகவும் அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,601-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,402-ஆக உயர்ந் துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 19,081 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்