பிரிட்டனில் இருந்து திருப்பூர் வந்த 31 பேருக்கு கரோனா தொற்று இல்லை

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: திருப்பூரில் பின்னலாடைத் தொழில் தேவைகளுக்காக வெளிநாடு சென்று வருவோரின் எண்ணிக்கை மிக அதிகம். பிரிட்டனில் உருமாறிய வீரியம் மிக்க கரோனா வைரஸ் காரணமாக, டிசம்பர் மாதம் முழுவதும் பிரிட்டன் சென்று வந்தவர்களின் விவரங்களை மாவட்ட சுகாதாரத் துறை சேகரித்தது.

முதல்கட்டமாக 11 பேரை பரிசோதித்ததில் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என உறுதியானது. அதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மேலும் 20 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் 20 பேருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்