கொமதேகவினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிக்கு கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து பொள்ளாச்சியில் அக்கட்சியினர் மாவட்ட செயலாளர் கே.நித்தியானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

51 பேர் கைது

திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் தலைமை யில், அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 51 பேரை வடக்கு போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்