தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துகேட்க வலியுறுத்தல்

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

போத்தம்பாளையம் ஊராட்சியில் தொழில் பூங்காவுக்கு நிலம்ஒதுக்கக்கூடாது. தொழில் பூங்காஅமைக்கவும், நிலத்தை கையகப் படுத்துவது தொடர்பாகவும் முதலில் கருத்துகேட்புக் கூட் டத்தை நடத்த வேண்டும்.

10 ஆண்டுகளாக தரிசாக உள்ள நிலங்களை விவசாயப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ரசாயன ஆலைகள் வருவதன் மூலமாக நிலத்தின் தன்மை கெடும். ஆகவே, தொழில் பூங்கா அமைக்கக்கூடாது. அவிநாசி ஒன்றியப் பகுதியில் விவசாய பூமியை எக்காரணம் கொண்டும், வேறு திட்டங்களுக்கு கையகப்படுத்தக்கூடாது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாய சங்க மாவட்டத் தலைவர் மதுசூதனன், துணைச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், விவசாய சங்க ஒன்றியப் பொருளாளர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்