காஸ் சிலிண்டர் விநியோகிப்போர் நவ.23-ல் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற் சங்கத் தின் மாநிலத் தலைவர் ஆர்.கணேஷ் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:கம்பம் கிராம சாவடி தெருவில் உள்ள காஸ் நிறுவனத்தில் சிலி ண்டர் விநியோகிக்கும் முத்து கருப்பையா என்பவர் தொழிற்சங்கத்தில் இணைந்தார்.

இதனால், அவரை காஸ் சிலிண்டர் விநியோக நிறுவனம் பணியிலிருந்து நீக்கிவிட்டது. இதனால் மனமுடைந்த அவர், நிறுவன வாயிலிலேயே தற் கொலைக்கு முயன்று, கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தொழிற்சங்கத்தில் இணைந்ததற்காக தொழிலாளியை பணி நீக்கம் செய்து, தற் கொலைக்கு தூண்டிய காஸ் சிலிண்டர் விநியோக நிறுவன உரிமையாளர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால், நவ.23-ல் தேனி யில் காஸ் சிலிண்டர் விநியோக நிறுவனம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்