போடி அருகே தோட்ட வீட்டில் பதுக்கிய 4 ஆயிரம் கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் குவாரி உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

போடி அருகே தோட்ட வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரம் கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக குவாரி உரிமையாளர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போடி அருகே துரைராஜபுரம் காலனியில் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது. போடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை போலீஸார் அப்பகுதியில் உள்ள கல்குவா ரியை சோதனை செய்தனர். அருகில் தென்னந்தோப்பில் உள்ள வீட்டைச் சோதனை செய்தபோது அங்கு 3 ஆயிரம் கிலோ வெடி மருந்துகள், ஆயிரம் கிலோ எலெக்ட்ரிக் தோட்டாக்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக கல்குவாரி நடத்தி வரும் முருகப்பா(53), அங்கு வேலை செய்த குமரேசன்(45), அணைக்கரைபட்டியைச் சேர்ந்த பெருமாள்(40) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE