120 காவலர்கள் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு

120 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி வழங்கப் பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் 1995-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. காவலராக பணியில் சேர்ந்து 15 ஆண்டுகள் கடந்த பின்னர் தலைமைக் காவலர் பதவி வழங்கப்படும். பின்னர் மேலும் 10 ஆண்டுகள் கடந்த பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி வழங்கப்படுகிறது.

அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது 120 தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி வழங்கப்படுகிறது. பதவி உயர்வு கிடைக்கப் பெற்றவர்கள் தற்போது பணிபுரியும் அதே காவல் நிலையத்தில் பணிபுரிவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE