காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம் :

காரைக்கால்: புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராமப் பஞ்சாயத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, போராட்டக்குழு அமைப்பாளர் அய்யப்பன் தலைமை வகித்தார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE