சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞர் கைது :

பண்ருட்டி அருகே உள்ள எம். ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (21). திருமணமான இவர் நேற்று பக்கத்து ஊரைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப் படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற் றோர் இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்