டிச.20-ம் தேதி கடையடைப்பு: மடீட்சியா :

மதுரை மடீட்சியா தலைவர் எம்.எஸ்.சம்பத் வெளியிட்ட அறிக்கை:

இரும்பு, அலுமினியம், தாமிரம், பேக்கிங் காகிதம், பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. இதனால், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரிடிச. 20-ல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நாடு முழுவதும் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் அனைத்து தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE