மதுரை அருகே இருவேறு விபத்துகளில் : இருவர் உயிரிழப்பு :

திருமங்கலம் அருகே அழகுசேரி தோட்ட வீடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் வினோத் (26). ராணுவ வீரரான இவர், தனது நண்பர் சரவணனுடன் கடந்த 12-ம் தேதி திருமங்கலம்-வாகைக்குளம் சாலையில் பைக்கில் சென்றார். மாயன்மேரி தோட்டம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே வினோத் உயிரிழந்தார். செக்கானூரணி போலீஸார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், மேலவாணியங்குடியைச் சேர்ந்தவர் வினிதா. இவரது சகோதரர் விக்னேஷ் (25) கடந்த 12-ம் தேதி மதுரை மாவட்டம் வாகைக்குளம்-தாதம்பட்டி ரோட்டில் தனது நண்பர் சங்கருடன் சென்றார்.மாரியப்பன் தோட்டம் அருகே விக்னேஷ் பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேடபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE