தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (16-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (16-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தூத்துக்குடி சிப்காட் வளாகம், ராஜகோபால் நகர், 3-வது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, இந்திய உணவுக்கழக குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், இ.பி.காலனி, டைமண்ட் காலனி, மதுரைபுறவழிச்சாலை, ஏழுமலையான் நகர், சில்வர்புரம், பசும்பொன் நகர், சின்னக்கண்ணு புரம், புதூர் பாண்டியாபுரம், அகில இந்திய வானொலி நிலையம், ஆசிரியர் காலனி, கதிர்வேல் நகர், கிருபை நகர், பால் பாண்டி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE