அரசு கல்லூரியில் ரத்த தான முகாம் :

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி, தருமபுரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கங்கள் ஆகியவை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்தவங்கியுடன் இணைந்து ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இம்முகாம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி தொடங்கி வைத்தார்.

இம்முகாம் மூலம் 71 யூனிட் ரத்தம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் ரத்த வங்கிக்கு அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE