திண்டுக்கல், பழநியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் - குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு :

திண்டுக்கல், பழநியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில்

மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்லுக்கு நேற்று வருகை தந்த மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கான தங்கும் வசதி, உணவு ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் பழநியில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கருணை இல்லம் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் ஆணையத் தலைவர் ஆய்வு செய்தார். அங்கு தங்கியுள்ள குழந்தைகளுக்கு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார். பழநி கோயில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE