ரயிலில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு :

ஜோலார்பேட்டை: வேலுார் மாவட்டம் விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சரவணன் (31). இவர், காட்பாடி ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தை நேற்று கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE