: விவசாய அணி மாநிலத் தலைவர் கருத்து

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி அமைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என்று, விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விவசாய அணி மாநிலத்தலைவர் ஜி.கே.நாகராஜ் பேசும்போது, "தமிழகத்தில் இளைஞர்கள் எழுச்சியோடு பாஜகவின் வளர்ச்சியும் பிரம்மாண்டமாக உள்ளது.

வரும் 2026-ல் ஆட்சி அமைக்கும் வகையில் பாஜக செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில் ஆட்சிபொறுப்பேற்றுள்ள திமுக, அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. பெண்களுக்கு உரிமைத்தொகை, சிலிண்டருக்குமானியம் வழங்கப்படவில்லை. பெட்ரோல்,டீசல் விலையைகுறைக்கவில்லை. வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

நாட்டில் இதுவரை 130 கோடிதடுப்பூசிகள்‌ வழங்கிய பிரதமருக்கு, செயற்குழு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்‌, பேரூராட்சிகளில் போட்டியிடும்‌ பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற, அனைத்து பொறுப்பாளர்களும் பாடுபட வேண்டும். மழைநீர் தேங்காமல் முறையாக செல்லும் வகையில், உதகையில்‌ கால்வாய்‌ பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில்‌ மக்கள் வசிக்கும்‌ குடியிருப்புப் பகுதிகளில் வனவிலங்குகள்‌ வராமல்‌தடுக்கும் வகையில்‌,‌ அகழிகள்‌ வெட்டுவதுடன்‌ சூரிய மின்‌வேலியையும் அமைக்க வேண்டும்‌.

கூடலூர்‌ சட்டப்பேரவைத் தொகுதியில்‌ தனியார்‌ வன பாதுகாப்புச்‌ சட்டத்தை வனம்‌ மற்றும்‌ வருவாய் துறையினர் திணித்து வருவதால்‌, வெளி மாவட்டம்,‌ மாநிலங்களுக்குமக்கள் வெளியேறும்‌ சூழல்‌ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்